Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காருண்யா நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இயேசு அழைக்கிறார் மற்றும் சீஷா தொண்டு நிறுவன தலைவருமான பால் தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “மு.க.ஸ்டாலின் சென்னையை சிங்கார சென்னை யாக மாற்றியவர். தான் சொல்வதையெல்லாம் மக்களின் நலன் கருதி செவ்வனே செய்து முடிப்பவர். பலகோடி மக்களின் நலன் காக்கவும், அனைத்து தரப்பு மக்கள் மகிழ்ச்சியடையவும் விடியலாக திகழ்கிறார்.
சென்னை, அடையாறில் எனது தந்தை நினைவாக டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையை நிறுவியவர். முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT