Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கரோனா தடுப்புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்ற திராவிடர் கழகம் வலியுறுத்தல்

சென்னை

கரோனா தடுப்புப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டிய அவசர, அவசியமானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பே மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகளை அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார். இன்றைய சூழலில், கரோனா பரவலைத் தடுத்து நிறுத்துவது சாதாரண பணி அல்ல. அது மிகப் பெரிய சவால். எனவே, மனம் தளராமல் மக்களுக்கு அச்சத்தைப் போக்கி இதை ஒரு மக்கள் இயக்கமாக்குவது மிகவும் அவசர அவசியமாகும்.

தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க மாநில அரசின் இயந்திரம் மிக வேகமாக முடுக்கிவிடப்பட வேண்டும். கூட்டம் கூடுதல், தனி நபர் இடைவெளியை கைவிடுதல் போன்றவற்றைத் தவிர்த்து சமூக சிந்தனையோடும் பொறுப்புணர்வோடும் ஒவ்வொருவரும் செயல்பட்டு, முதல்வருக்கும் ஆட்சிக்கும், அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x