Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் நேற்று முன்தினம் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "எனது வீட்டில் ரூ.12 லட்சத்தை யாரோ திருடி விட்டனர்" என்று குறிப் பிட்டிருந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தியதில், தொழிலதிபரின் 8-ம் வகுப்பு படிக்கும், 14 வயது மகன், கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிலிருந்த ரூ.12 லட்சத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவனிடம் போலீஸார் விசாரித்தபோது, ஆன்லைன் கேம் விளையாட சிறுவன் பணத்தை திருடியதுதெரியவந்தது. சிறுவனை போலீஸார் எச்சரித்து, விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT