Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

ராகுல் காந்தியிடம் போராடிப் பெற்றும் பிரச்சாரம் செய்யாததால் மேலூரைக் கோட்டை விட்ட காங்கிரஸ்

ராகுல் காந்தியிடம் போராடிப் பெற்ற மேலூர் தொகுதியில் சரியாக தேர்தல் பிரச்சாரம் செய் யாததால் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

மதுரை மாவட்டம் மேலூர் தொகு தியில் காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2001 முதல் 2016 வரை தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றது.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பெரியபுள்ளான் என்ற செல்வம் இந்தத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டார்.

மேலூரில் முதலில் திமுக போட்டியிடுவதாக இருந்தது. கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஏ.பி.ரகுபதியை மீண்டும் வேட்பாளராக நிறுத்த திமுக திட்டமிட்டது.

இந்நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மேலூரில் தனது சொந்த மாமனார் ரவிச்சந்திரனை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து, ராகுல் காந்தியிடம் பேசி மேலூர் தொகுதியை காங்கி ரஸூக்கு பெற்றுத் தந்தார்.

மேலூரில் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம் 35,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தொகு தியை தக்க வைத்துள்ளார்.

ரவிச்சந்திரன் தோல்வி யடைந்தார். அவருக்கு 48,182 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 25 சுற்று வாக்கு எண்ணிக்கையில் 17, 18, 26 சுற்றுக்களில் மட்டும் பெரியபுள்ளானை விட ரவிச் சந்திரன் கூடுதல் வாக்குகள் பெற் றார். மற்ற 22 சுற்றுக்களிலும் பெரியபுள்ளான் தான் முன்னிலை வகித்தார். தபால் வாக்குகளில் பெரியபுள்ளானைவிட ரவிச் சந்திரன் 237 வாக்குகள் கூடுதலாக வாங்கினார்.

காங்கிரஸ் வேட்பாளர் ரவிச்ச ந்திரன் வேட்பு மனு தாக்கல் செய் ததோடு சரி. அதன் பிறகு சரியாகப் பிரச்சாரம் செய்யவில்லை. கூட்டணிக் கட்சியினரை அர வணைத்துச் செல்லவில்லை. தேர்தல் செலவுக்குப் பணமும் கொடுக்கவில்லை.

திமுகவினர் தங்கள் கட்சி மேலிடம் அளித்த பணத்தை வைத்து தேர்தல் பணி யாற்றியதால் இந்த வாக்குகள் கிடைத்தன.

பிரச்சாரத்தில் வேட்பாளர் பின்தங்கியிருப்பதை மாணிக்கம் தாகூரிடம் திமுகவினர் தெரி வித்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் உரிய ஒத்துழைப்பு வழங்காதது குறித்து திமுக சார்பில் தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

அதன் பிறகும் ரவிச்சந்திரன் தீவிர பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் ராகுல் காந்தியிடம் போராடிப் பெற்ற மேலூர் தொகு தியை காங்கிரஸ் கோட்டை விட்டுள்ளது.

அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் பிரச்சாரத்துக்கு சென்றபோது பல இடங்களில் மக்கள் அதிருப் தியை வெளிப்படுத்தினர். இதை சமாளிக்க முடியாமல் அவர் திணறினார். இருப்பினும் காங் கிரஸ் வேட்பாளரின் சுணக்கம், முத்தரையர் வாக்கு வங்கி, தொகுதியைச் சேர்ந்தவர் ஆகிய காரணங்களால் மேலூரை பெரியபுள்ளான் இரண்டாவது முறையாகத் தக்க வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x