Published : 12 Dec 2015 09:07 PM
Last Updated : 12 Dec 2015 09:07 PM

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் சில இடங்களில் இன்று பரவலாக மழை பெய்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, கோவில்பட்டி, ஸ்ரீமுஷ்ணம், விளாத்திக்குளம், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழையும், விருதுநகர், அருப்புக்கோட்டை, பாபநாசம், காட்டுமன்னார்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, “ ‘தமிழகத்தில் கனமழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. ஏற்கெனவே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மாலத்தீவு பக்கம் நகர்ந்து சென்று விட்டது. அடுத்த 24 மணிநேரத்தில் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வடமாவட்டங்களில் சில இடங்களில் பழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்றனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x