Published : 03 May 2021 08:44 PM
Last Updated : 03 May 2021 08:44 PM

தமிழகத்தில் இன்று 20,952 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 6,150 பேருக்கு பாதிப்பு: 18,016 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்றைய கரோனா தொற்று விவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று 20,952 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 6,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 12,28,064. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3,52,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,90,338.

இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 17 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 41,10,245.

சென்னையில் 6,150 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 14,902 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 196 தனியார் ஆய்வகங்கள் என 265 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (மே 03) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,258.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,30,97,963.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,41,021.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 12,28,064.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 20,952.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,150.

* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) 32,785

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 7,41,495 பேர். பெண்கள் 4,86,531 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 12,345 பேர். பெண்கள் 8,607 பேர். மூன்றாம் பாலினத்தவர் இல்லை.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 18,016 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 10,90,338 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 122 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 46 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் ஆவர். 76 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,468 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,858 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 100 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 22 பேர்".

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x