Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

வெற்றியை அறிவிக்கும் வரை வாழ்த்த வரவேண்டாம்: கட்சியினருக்கு வேட்பாளர்கள் வேண்டுகோள்

வெற்றியை அறிவிக்கும் வரை வாழ்த்து தெரிவிக்க கட்சியினர் நேரில் வரவேண்டாம் என முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின் றன. கரோனா பரவல் காரணமாக வெற்றியைக் கொண்டாட பட்டாசு வெடிக்கத் தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் கட்சியினருக்கு பல்வேறு வேண்டு கோள்களை வாய்மொழியாக பிறப்பித்துள் ளனர். இது குறித்து கட்சியினர் கூறியது:

வெற்றியை அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஆட்சி அமைக்கும் வகையில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெறப்போகிறது என்ற தகவலையும் கவனிக்க வேண்டும். வாழ்த்து தெரிவிக்கவும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் சட்ட விதிகளை மீறி தேடி வரவேண்டாம். கட்சித் தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

தேர்தல் பணியின்போது பயன் படுத்தப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவில் வாக்கு விவரங்கள் பதிவு செய்யப்படும்.

எக்காரணத்தைக்கொண்டும் வாழ்த்து தெரிவிக்க வேட்பாளர்களைத் தேடி வர வேண்டாம். வெற்றியைப் பலரும் அறியும் வகையில் கொண்டாட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளதாக கூறினர்.

வெறிச்சோடிய லாட்ஜ்கள்

லாட்ஜ் உரிமையாளர்கள் கூறும்போது, வாக்கு எண்ணிக்கையின்போது நண்பர்கள் பலரும் இணைந்து லாட்ஜ்களில் அறை எடுத்து டிவிக்களில் தேர்தல் முடிவுகளைப் பார்ப்பது வழக்கம். இதற்காகவே பெரும்பாலான அறைகள் முன்பதிவு செய்யப்படும். தற்போது கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல், கொண்டாட்டத்துக்கு தேர்தல் ஆணையம் தடை ஆகியவற்றால் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க யாரும் அறைகளைப் பதிவு செய்யவில்லை. இதனால் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x