Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

பட்டாசு வெடிக்கவோ, ஊர்வலம் செல்லவோ கூடாது; வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட அரசியல் கட்சிகளுக்கு தடை விதிப்பு: தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ நீதிபதிகள் அறிவுறுத்தல்

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசியல் கட்சியினர் வெற் றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பட்டாசு வெடிக்கக் கூடாது, ஊர்வலம் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கரோனா 2-வது அலை தீவிர மாக பரவி வரும் சூழலில் ரெம் டெசிவிர் மருந்து, ஆக்சிஜன், வெண்டிலேட்டருக்கு பற்றாக்குறை நிலவுவதாக ‘இந்து தமிழ் திசை’ செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல, கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரோனா விதி முறைகளுக்காக தேர்தல் ஆணை யம் குறித்து வழக்கு தொடர்ந் திருந்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 26-ம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தது. ‘‘தேர்தல் பிரச்சாரத்தின்போது அர சியல் கட்சியினர் கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின் பற்றவில்லை. இதற்காக கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவ தேர்தல் ஆணையம்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இதற் காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலைக்குற்றம் கூட சுமத்த லாம்" என வாய்மொழியாக கருத்து தெரிவித்தனர். இந்த வாய்மொழி கருத்து உத்தரவில் இடம்பெற வில்லை என்பதால், அந்த கருத்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பிரசுரிக்கப்பட வில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கொலைக்குற்றம் கூட சுமத்த லாம் என நீதிபதிகள் வாய் மொழியாக தெரிவித்த கருத்து ஆணையத்தின் மீதான நன் மதிப்புக்கு பங்கம் ஏற்படும். பிரச்சாரத்தின்போது தொற்று எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கரோனா பரவ லுக்கு தேர்தல் ஆணைய அதி காரிகள்தான் முழு பொறுப்பு என்பதை ஏற்க இயலாது. வாய்மொழியாக தெரிவிக்கும் கருத் துக்களை வெளியிட ஊடகங் களுக்கு தடை விதிக்க வேண்டும். இதன்பேரில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. நீதிபதிகளும் இதுபோன்ற கருத்துக் களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும்’ என அதில் கோரி யிருந்தது.

மேலும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக மேற்கொள்ளப் பட்டுள்ள கரோனா தடுப்பு நட வடிக்கைகள் குறித்து தமிழக அரசு தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதையடுத்து தேர்தல் ஆணை யத்தின் நடவடிக்கைக்கு திருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஆணையம் தரப்பில் வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:

கரோனா தடுப்பு விதிகளை அர சியல் கட்சித் தலைவர்கள் கண் டிப்புடன் பின்பற்றி முன்னுதாரண மாக திகழ வேண்டும். அரசியல் கட்சியினர் யாரும் வெற்றிக் கொண் டாட்டங்களில் ஈடுபடக் கூடாது. பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. ஊர் வலம் செல்லக் கூடாது. கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீட்டில் இருந்தபடியே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறை களை அமல்படுத்த வேண்டும். புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டும் கடைகள் திறக் கப்பட்டுள்ளது அதிருப்தி அளிக் கிறது. இவ்வாறு தெரிவித்தனர். பின்னர், அடுத்த விசாரணையை மே 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x