Last Updated : 30 Apr, 2021 05:04 PM

 

Published : 30 Apr 2021 05:04 PM
Last Updated : 30 Apr 2021 05:04 PM

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 45 பேருக்குக் கரோனா உறுதி

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி உட்பட 45 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா 2வது அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், ஊழியர்கள், ஓட்டுனர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் நீதிபதி உட்பட 45 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றக் கிளை ஊழியர்களுக்கு தொடர்ந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் உயர் நீதிமன்றக் கிளை அரசு வழக்கறிஞர்கள் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x