Last Updated : 30 Apr, 2021 03:17 PM

 

Published : 30 Apr 2021 03:17 PM
Last Updated : 30 Apr 2021 03:17 PM

புதுச்சேரியில் 1,195 பேருக்கு கரோனா; மேலும் 12 பேர் உயிரிழப்பு: இறப்பு எண்ணிக்கை 800-ஐ தாண்டியது

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 1,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, இன்று ஒரே நாளில் புதிதாக 1,195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 பெண்கள் உட்பட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 622 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 805 ஆகவும் உயர்ந்துள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஏப். 30) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 6,451 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 855, காரைக்கால் - 174, ஏனாம் - 108, மாஹே - 58 பேர் என, மொத்தம் 1,195 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி கொசப்பாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்த 81 வயது முதியவர், தவளக்குப்பம் அங்காளம்மன் கோயில் வீதியை சேர்ந்த 60 வயது முதியவர், மோகன் நகரை சேர்ந்த 62 வயது முதியவர், பூமியான்பேட்டையை சேர்ந்த 63 வயது முதியவர், உருளையன்பேட்டை மார்க்கெட் வீதியை சேர்ந்த 65 வயது முதியவர், பழைய சாரம் கிழக்கு வீதியை சேர்ந்த 59 வயது மூதாட்டி, பாகூர் பழைய காமராஜ் நகரை சேர்ந்த 40 வயது பெண், தட்டாஞ்சாவடி சுப்பையா நகரை சேர்ந்த 46 வயது பெண், சொக்கநாதன் பேட்டையை சேர்ந்த 64 வயது முதியவர், கருவடிக்குப்பம் மகாவீர் நகரை சேர்ந்த 74 வயது முதியவர், வி.பி.சிங் நகரை சேர்ந்த 67 வயது முதியவர் மற்றும் காரைக்காலை சேர்ந்த 74 வயது முதியவர் என 3 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 805 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.37 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 58 ஆயிரத்து 622 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,754 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 7,765 பேரும் என மொத்தமாக 9,519 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 654 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 298 (82.39 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 7 லட்சத்து 96 ஆயிரத்து 722 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 84 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x