Last Updated : 29 Apr, 2021 05:02 PM

 

Published : 29 Apr 2021 05:02 PM
Last Updated : 29 Apr 2021 05:02 PM

தமிழகத்தில் இரவு நேர, வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தனர்.

தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அதேபோன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஊரடங்கை எதிர் கொள்வதற்கு பொதுமக்களும் தயாராக இல்லை.

இருப்பினும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x