Last Updated : 29 Apr, 2021 04:36 PM

 

Published : 29 Apr 2021 04:36 PM
Last Updated : 29 Apr 2021 04:36 PM

நெல்லை மாவட்டத்தில் 872 பேருக்கு கரோனா பாதிப்பு: பாளை. சிறை அலுவலக கண்காணிப்பாளர் மரணம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 872 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும் 465 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

வட்டாரம் வாரியாக பாதிப்பு விவரம்:

அம்பாசமுத்திரம்- 59, மானூர்- 42, நாங்குநேரி- 36, பாளையங்கோட்டை- 88, பாப்பாகுடி- 15, ராதாபுரம்- 37, வள்ளியூர்- 67, சேரன்மகாதேவி- 40, களக்காடு- 23.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை மத்திய சிறை அலுவலக கண்காணிப்பாளர் தங்கையா கரோனாவால் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த தங்கையா கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 4 நாட்களுக்குமுன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 5 பேர் நோய்த் தொற்று காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x