Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

14 சிறப்பு ரயில்களின் சேவை ரத்து

சென்னை

பயணிகளின் வருகை குறைந்ததால், சென்னை - மைசூரூ சதாப்தி, சென்னை - கோவை சிறப்பு ரயில்கள் உட்பட 14 ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவல் காரணமாகபயணிகளின் வருகை குறைந்ததால், சென்னை சென்ட்ரல் - மைசூரூ சதாப்தி சிறப்பு ரயில்(06081/82), சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில்(06029/30) ஆகியவை நாளை (ஏப்.29) முதலும், ராமேசுவரம்- கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06165/66) மே 1-ம் தேதி முதலும்தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இவைதவிர, பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வந்த மேலும் 10 ரயில்களின் சேவையும்தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x