Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் தேவர் (68) உடல் நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகில் உள்ள டி.குண்ணத்தூர் அம்மா கோயில் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கரோனா கட்டுப்பாடு காரணமாக நேரில் வரமுடியாததால் முதல்வர்பழனிசாமி, போன் மூலம் ஆர்.பி.உதயகுமாரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜலெட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன், காவல் துறை துணைத் தலைவர் சுதாகரன், வேலம்மாள் மருத்துவமனை தலைவர் முத்துராமலிங்கம், எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, எஸ்எஸ். சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம், டாக்டர் சரவணன், சதன் பிரபாகர், முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, வைகை செல்வன், அதிமுக மாவட்டசெயலாளர்கள் முனியசாமி, செந்தில்நாதன், பாஜகவை சேர்ந்த சீனிவாசன், சசி ராமன், திமுகவைசேர்ந்த கோபிநாதன், மதிமுகவைச் சேர்ந்த பூமிநாதன், முன்னாள் துணை மேயர் மன்னன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அம்மா கோயில் வளாகத்திலேயே பிற்பகல் 2.30 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT