உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு
Updated on
1 min read

ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற் றுள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர் கூறி யிருப்பதாவது:

அனைத்து ஜாதியினரும் அர்ச்ச கராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘‘ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக பலரும் பலவித மான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் இந்து அறநிலையத் துறை ஆணையர், அதிகாரிகள், ஆதினங்கள், மடாதி பதிகள், சிவாச்சாரியார்கள், பட்டர் கள் இடம்பெற்றனர்.

இந்தக் குழு அளித்த பரிந்துரை களின்படியே அனைத்து ஜாதிகளை யும் சேர்ந்த 207 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்ற வர்கள். ஆகம விதிகளை அறிந்தவர் கள். எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இவர்களை உடனடியாக அர்ச்சகர்களாக நியமிக்க வேண் டும். தமிழக அரசும், இந்து அற நிலையத் துறையும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in