Published : 08 Jun 2014 11:14 AM
Last Updated : 08 Jun 2014 11:14 AM
இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக வருகை தந்துள்ள சீன அயலுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியாவுடன் கருத்து வேற்றுமைகளை விட கருத்தொற்றுமைகளே அதிகம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
எல்லைப்பிரச்சனைகள் இருநாடுகளுக்கு இடையிலான சகஜமான உறவுகளைப் பாதித்து விடக்கூடாது என்று கூறியுள்ளார் வாங் யீ.
இந்து ஆங்கிலப் நாளிதழ் சமர்ப்பித்த கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வ பதில் அளித்த வாங் யீ, சீன அதிபர் ஸீ ஜின்பிங், தன்னை சிறப்புத் தூதுவராக இங்கு அனுப்பியுள்ளார். மோடி பதவியேற்றவுடனேயே, புதிய அரசுடன் உடனடியாகத் தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அதிபரின் விருப்பம் என்று கூறிய வாங் யீ, இந்த ஆண்டின் பிற்பகுதியில் சீன அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவார் என்றார்.
இடையில் ஜூலை மாதம் பிரேசிலில் நடைபெறும் "பிரிக்ஸ்" கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றார் அவர்.
மேலும் நரேந்திர மோடியை அவர் பாராட்டுகையில், பதவியேற்றவுடனேயே தீர்க்கமான, தைரியமான சீர்திருத்த முடிவுகளை எடுத்ததோடு ஆட்சிக்கு புத்துயிர்ப்பையூட்டியுள்ளார் என்று கூறினார்.
"என்னுடைய இந்த வருகை இந்திய மக்களுக்கு முக்கியமான செய்தியை கொண்டு வந்துள்ளது. சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி ஆகியவை குறித்த மோடி அரசின் முயற்சிக்கு சீனா எப்போதும் துணை நிற்கும். எனது இந்த இந்தியப் பயணம் நிறைய செய்திகளைச் சொல்லும் நோக்கத்துடன் நண்பர்களை அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளிடையே வரலாறு மீதம் வைத்த விவகாரங்கள் இருக்கும், அல்லது உடனடி நலன்கள் சார்ந்த விவகாரங்கள் இருக்கும், இருநாடுகளுக்கும் இடையே நிறைய கருத்தொற்றுமைகளே இருக்கின்றன வேறுபாடுகள் இல்லை.
எந்த ஒரு நாடும் தனது அண்டை நாட்டை தேர்வு செய்வதில்லை ஆனால் நட்பை வளர்த்தெடுக்க முடியும். சில பிரச்சனைகளைத் தவிர்க்க முடியாது, ஆனால் புதிய விடைகளைக் கண்டெடுக்க முடியும். வரலாற்றை மீண்டும் எழுத முடியாது ஆனால் எதிர்காலம் நம் கையில்தான் உள்ளது" என்று கூறியுள்ளார் வான் யீ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT