சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்

எப்போதும் பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும் ஏற்காட்டில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சாலையோரக் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
எப்போதும் பயணிகள் வருகையால் பரபரப்பாக இருக்கும் ஏற்காட்டில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள சாலையோரக் கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.
Updated on
1 min read

சுற்றுலா சார்ந்த தொழிலாளர் களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என ஏற்காட்டில் சுற்றுலா சார்ந்த தொழிலில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

கரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வரும் நிலையில், சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் வருகைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஏற்காட்டில் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியுள்ளது.

ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஏற்காடுக்கு அதிகளவு பயணிகள் வந்து செல்வது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாசார்ந்த தொழிலை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போதைய தடையால் மீண்டும் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சுற்றுலா தலங்களில் சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனை வருக்கும் அரசு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஏற்காட்டில் சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர் கூறியதாவது:

கடந்தாண்டு கரோனா முதல் அலை ஊரடங்கின்போது அரசு ரேஷன் கார்டுதார்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கியது. ஏற்காட்டில் வெளியூர் பயணிகள் வராத நிலையில், முழு ஊடரங்கை போன்று சாலைகள் வெறிச்சோடியும், வியாபாரம் நடத்த முடியாத நிலையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

எனவே, ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் வசிக்கும் மக்களுக்கும், சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபடும் சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் களுக்கும் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in