Published : 26 Apr 2021 01:18 PM
Last Updated : 26 Apr 2021 01:18 PM

ஹாட் லீக்ஸ்: அரசுக்கு எதிராகப் போராடத் தயாராகும் அமைச்சர்!

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டாலும் நாம் எப்படியும் ஜெயித்து விடுவோம் என்று திடமாக நம்பும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ஒருவேளை, திமுக ஆட்சி அமைந்தாலும் அடுத்த ஆறு மாதத்திலேயே அரசுக்கு எதிரான போராட்டங்களை கையிலெடுக்க தயங்கமாட்டேன்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல ஆரம்பித்திருக் கிறாராம். “எப்படியும் இந்தத் தேர்தலுடன் ஓபிஎஸ் ஓரங்கட்டப்படலாம். அப்போது கட்சியின் முக்கிய தென்மண்டல தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சிதான் உதயகுமாரின் இந்த அறைகூவலுக்கு பின்னணியில் இருக்கும் சங்கதி” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x