உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் பொள்ளாச்சி ஜெயராமன் அனுமதி

உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் பொள்ளாச்சி ஜெயராமன் அனுமதி
Updated on
1 min read

சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன். சென்னையில் வசித்து வந்த அவருக்கு நேற்று மாலை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். மருத்துவர்களிடம் கேட்டபோது, பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் நலமுடன் உள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in