Published : 23 Apr 2021 10:40 PM
Last Updated : 23 Apr 2021 10:40 PM

2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு வருகிறது. அந்தவகையில் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி பணியிட 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை சிலைகடத்தல் புலனாய்வு பிரிவு, ஐஜியாக இருக்கும் எம்.டி.கணேஷ்மூர்த்தி ஐபிஎஸ், சென்னை தலைமையகத்தின் தற்போது காலியாக உள்ள இடத்தில் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுபோலவே சென்னை சட்டம்- ஒழுங்கு பிரிவு உதவி ஐஜியாக இருக்கும் ஆர்.திருநாவுக்கரசு ஐபிஎஸ் சென்னை பெருநகர காவல்துறை மயிலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x