லஞ்சம் வாங்கிய விஏஓவிற்கு 4 ஆண்டுகள் சிறை: சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் வாங்கிய விஏஓவிற்கு 4 ஆண்டுகள் சிறை: சிவகங்கை நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பத்தூரை அருகே நடுவிக்கோட்டை கீழையூர் கிராம நிர்வாக அலுவலராக 2006-ம் ஆண்டில் பணிபுரிந்தவர் நாடிமுத்து. இவர் நடுவிக்கோட்டையைச் சேர்ந்த விசாலாட்சி என்பவரிடம் புதிய குடும்ப அட்டைக்காக ரூ.200 லஞ்சம் வாங்கியபோது லஞ்சஒழிப்பு போலீஸாரிடம் பிடிப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன் குற்றம்சாட்டப்பட்ட நாடிமுத்துவுக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in