Last Updated : 22 Apr, 2021 02:27 PM

 

Published : 22 Apr 2021 02:27 PM
Last Updated : 22 Apr 2021 02:27 PM

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 987 பேருக்கு கரோனா தொற்று: 5 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் (ஏப்.22) வெளியிட்டுள்ள தகவல்:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 4,675 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 837 பேருக்கும், காரைக்காலில் 89 பேருக்கும், ஏனாமில் 40 பேருக்கும், மாஹேவில் 21 பேருக்கும் என மொத்தம் 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது.

ஜிப்மரில் 226 பேர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 291 பேர், கோவிட் கேர் சென்டரில் 392 பேர் என மொத்தம் 909 பேரும், காரைக்காலில் 60 பேர், ஏனாமில் 101 பேர், மாஹேவில் 37 பேர் என மருத்துவமனைகளில் 1,107 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 3,676 பேர், காரைக்காலில் 722 பேர், ஏனாமில் 215 பேர், மாஹேவில் 203 பேர் என மாநிலம் முழுவதும் மொத்தம் 5,923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டை பாரதி நகர் 1-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் நெசவாளர் நகரைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஆகிய இருவர் ஜிப்மரிலும், வடுவுக்குப்பத்தைச் சேர்ந்த 55 வயதுப் பெண், 57 வயது ஆண் ஆகிய இருவரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காரைக்கால் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 726 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.44 சதவீதமாக உள்ளது.

இதனிடையே இன்று புதுச்சேரியில் 400 பேர், காரைக்காலில் 24 பேர், ஏனாமில் 15 பேர், மாஹேவில் 25 பேர் என மொத்தம் 464 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 931 (86.85 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 791 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 819 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள் 30 ஆயிரத்து 857 பேரும், முன்களப் பணியாளர்கள் 18 ஆயிரத்து 174 பேரும், பொதுமக்கள் 1 லட்சத்து 10 ஆயித்து 842 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 47 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’

இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x