Published : 28 Dec 2015 08:20 AM
Last Updated : 28 Dec 2015 08:20 AM

31-ம் தேதி பாமக சார்பில் புத்தாண்டு விழா

பாமக சார்பில் புத்தாண்டு வாழ்த்து பரிமாற்ற நிகழ்ச்சி நடக்க உள்ளதாக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில், வரும் 31-ம் தேதி காலை பாமக சார்பில் புத்தாண்டு வாழ்த்து பரிமாற்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. 2015-ம் ஆண்டுக்கு விடை கொடுத்து, 2016-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று, நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், அவர்களின் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x