Published : 28 Dec 2015 08:20 AM
Last Updated : 28 Dec 2015 08:20 AM
பாமக சார்பில் புத்தாண்டு வாழ்த்து பரிமாற்ற நிகழ்ச்சி நடக்க உள்ளதாக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில், வரும் 31-ம் தேதி காலை பாமக சார்பில் புத்தாண்டு வாழ்த்து பரிமாற்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. 2015-ம் ஆண்டுக்கு விடை கொடுத்து, 2016-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று, நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், அவர்களின் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT