

வண்டலூரில் வெள்ளைப் புலி ஈன்ற குட்டிகளுக்கு தேவா, நகுலா, கலா, மாலா என முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார்.
இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கடந்த அக்டோபர் 16-ம் தேதி வெள்ளைப் புலியான நம்ருதா, 2 ஆண், 2 பெண் என 4 புலி குட்டிகளை ஈன்றது. இதில் ஆண் குட்டிகளுக்கு தேவா, நகுலா என்றும் பெண் குட்டிகளுக்கு கலா, மாலா என்றும் முதல்வர் ஜெயலலிதா நேற்று பெயர் சூட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.