

பட்டுக்கோட்டை அதிமுக எம்எல்ஏ-வான சி.வி.சேகர், மண்டல பொறுப்பாளரான வைத்திலிங்கத்தை ஓவர்லுக் செய்து சிலபல காரியங்களைச் செய்தாராம். வைத்தியிடமே சொல்லாமல் தனது மகன் திருமணத்துக்காக எடப்பாடியாரை பைபாஸில் பட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்தார் சேகர். எடப்பாடியாரே தனது வீட்டு விசேஷத்துக்கு வந்து போனதால் மீண்டும் தனக்கு சீட் நிச்சயம் என நம்பிக் கொண்டிருந்தார் சேகர். ஆனால், பேச வேண்டிய நேரத்தில் பேசவேண்டிய விதமாகப் பேசி தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கவைத்து சேகருக்கு செக்வைத்து விட்டாராம் வைத்தி. இதனால் இனிமேல் அதிமுகவில் குப்பைகொட்ட முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட சேகர், அறிவாலயத்துப் பக்கம் போய்விடலாமா என ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாராம்.