Last Updated : 20 Apr, 2021 03:05 PM

 

Published : 20 Apr 2021 03:05 PM
Last Updated : 20 Apr 2021 03:05 PM

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழப்பு; புதிதாக 638 பேர் பாதிப்பு: சிகிச்சையில் 5,073 பேர்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஏப். 20) வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 5,670 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 465 பேருக்கும், காரைக்காலில் 99 பேருக்கும், ஏனாமில் 42 பேருக்கும், மாஹேவில் 32 பேருக்கும் என, மொத்தம் 638 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48 ஆயிரத்து 974 ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 904 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 4,169 பேர் என, மொத்தம் 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர் என, 4 பேர் உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் 253 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 184 (88.18 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 7 லட்சத்து 37 ஆயிரத்து 514 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 6 லட்சத்து 69 ஆயிரத்து 341 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 72 ஆயிரத்து 404 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களில் 18 பேர் உயிரிழப்பு:

புதுச்சேரியில் கடந்த 5 நாட்களில் மட்டும் கரோனா தொற்றுக்கு மாநிலம் முழுவதும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 3,112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 9 பேர் இறந்துள்ளனர். கரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரத்தில், இறப்பு எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருந்து முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது என, அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x