Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ,மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
பாஜக மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா இக்குழுவின் தலைவராகவும், மாநில மருத்துவர் பிரிவின் தலைவர் டாக்டர் விஜய் பாண்டியன் துணைத் தலைவராகவும் இருப்பார்கள்.
மாநில துணைத் தலைவர்கள் கருப்பு முருகானந்தம், புரட்சி கவிதாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயின்ட் மணி, மாநில இணை பொருளாளர் எம்.சிவசுப்பிரமணியன், எஸ்.சி. அணி தலைவர் பொன்.பாலகணபதி, கல்வியாளர் பிரிவு தலைவர் தங்ககணேசன், அறிவுசார் பிரிவு தலைவர் ஷெல்வி தாமு, முன்னாள் ராணுவப் பிரிவு தலைவர் கர்னல் பாண்டியன், இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மகளிர் அணி பொதுச் செயலாளர்கள் நெல்லையம்மாள், மீனாட்சி அரவிந்த், சேலம் மேற்கு மாவட்ட பார்வையாளர் கோபிநாத், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சிப் பிரிவு தலைவர் பி.பாஸ்கர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் பாஜக சார்பில் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT