Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

குறுக்கே வந்த பெண்களால் திடீர் பிரேக்: லாரி மோதி பேராசிரியர் உயிரிழப்பு

அசோக்குமார்

வண்டலூர்

கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37) இவர் பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றார். கூடுவாஞ்சேரி அருகே சென்றபோது 2 பெண்கள் திடீரென சாலையைக் கடக்க முயன்றனர். இதனால், பதற்றமடைந்த அசோக்குமார் திடீரென தனது பைக்கை பிரேக் அடித்து நிறுத்தினார்.

அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி, இவர் மேல் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அசோக்குமார் உடலைகைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரியைத் தேடி வருகின்றனர். குறுக்கே வந்த 2 பெண்களை காப்பாற்ற முயன்ற பேராசிரியர் லாரி மோதி இறந்த சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்த அசோக்குமாருக்கு சிந்து என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x