Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

மாமல்லபுரத்தில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்படும் மாமல்லபுரம் கடற்கரை கோயில் முகப்பு பகுதி.

மாமல்லபுரம்

கரோனா ஊரடங்கு உத்தரவால், மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை கலைச் சின்னங்கள் மற்றும் கடற்கரைக்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின்றி மாமல்லபுரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

நாளுக்கு நாள் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை, கலைச்சின்ன வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. முட்டுக்காடு பகுதியில் உள்ள படகு குழாம், சதுரங்கப்பட்டினம் டச்சு கோட்டை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால், சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் மாமல்லபுரம் வெறிச்சோடிக் காணப்பட்டது. எனினும், கடற்கரைக்குச் செல்லும் சாலைகளில் ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தன. சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் மாமல்லபுரம் நகரச் சாலைகளும் மக்கள் நடமாட்டமின்றி, வெறிச்சோடிக் காணப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x