Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM

பிணவறையில் இருந்த உடல் மாற்றி ஒப்படைப்பு: தேனி அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் இருந்த உடலை ஊழியர்கள் தவறுதலாக மாற்றிக் கொடுத்து விட்டனர். இதையடுத்து உற வினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு(71). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். அய்யாவு வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 16-ம் தேதி உடல்நிலை பாதித்து மயங்கி விழுந்துள்ளார்.

போலீஸார் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இவரது உடல் பிணவறைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் தற்கொலை செய்து இறந்த பெரியகுளத்தைச் சேர்ந்த ராமு என்பவரின் உடலும் அங்கு இருந்துள்ளது. ராமுவின் உறவினர்கள் வந்தபோது தவ றுதலாக அய்யாவு உடலை அவர் களிடம் ஒப்படைத்து விட்டனர்.

அந்த உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்களும் வீட் டுக்குக் கொண்டு செல்லாமல் நேரடியாக மயானத்துக்குக் கொண்டு சென்று எரித்து விட்டனர்.

இந்நிலையில் அய்யாவு உறவி னர்கள் நேற்று உடலைக் கேட்டு வந்தனர். அப்போது, உடலைத் தேடி பார்த்த ஊழியர்கள் காண வில்லை என்றதும் பதற்றம் அடைந்தனர். அப்போதுதான் உடலை மாற்றி அடுத்தவர்களிடம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

இதனைக் கண்டித்து உறவி னர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டு சாலை மறியல் செய்ய முயன்றனர்.

கூடுதல் காவல் கண் காணிப்பாளர் சங்கரன் தலை மையில் ஆண்டிபட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்க கிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். எரிக்கப்பட்ட இடத்தில் அஸ்தியைப் பெற்று இறுதிக் காரியம் செய்து கொள்ளும்படி கூறினர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுச் சென் றனர்.

மேலும் ராமுவின் உறவினர் களிடம் உடலை எடுத்துச் செல் லும்படி போலீஸார் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x