Published : 22 Dec 2015 08:50 AM
Last Updated : 22 Dec 2015 08:50 AM

நாளை முதல் பிளஸ்-2 தனித்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ்-2 துணைத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (புரவிஷனல்) நவம்பர் 2-ம் தேதி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டிருந்தனர்.

தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் துணைத் தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களுக்கும் 23-ம் தேதி (புதன்கிழமை) முதல் ஜனவரி 8-ம் தேதி (விடுமுறை நாட்கள் நீங்கலாக) வரை தேர்வெழுதிய தேர்வு மையங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஜனவரி 8-ம் தேதிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x