Published : 17 Apr 2021 03:15 AM
Last Updated : 17 Apr 2021 03:15 AM

பரோட்டா மாஸ்டருக்கு 5 ஆண்டு சிறை

திருச்சி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகரைச் சேர்ந்த அப்துல் வஹாப் மகன் ஜாபர் அலி(39). பரோட்டா மாஸ்டரான இவர், கடந்த 2018-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜாபர் அலியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜாபர் அலி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x