Published : 16 Apr 2021 07:59 PM
Last Updated : 16 Apr 2021 07:59 PM

முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த அவதூறு வழக்குகள்: ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்; சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை ((கவுண்டவுன்)) குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் (₹ 30 கோடி ஊழல்) விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து முதல்வர் பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, அவர்கள் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு இரு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தது.

அந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தது, இரு வழக்குகளிலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, மே 6 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x