Published : 15 Apr 2021 06:50 PM
Last Updated : 15 Apr 2021 06:50 PM

சசிகலா தலைமையில் அண்ணாமலையார் கோயிலில் டிடிவி தினகரனின் மகள் திருமணம்: ஏற்பாடுகள் தீவிரம்  

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சசிகலா நடராஜன் தலைமையில் டிடிவி தினகரனின் மகள் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள், கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைப் பார்வையிட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் திருமணம் தொடர்பாக உரையாடினர். இதையடுத்து டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தரப்பில் கேட்டபோது, “சசிகலா நடராஜன் தலைமையில் தினகரன் மகளின் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x