Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு கோயில் நிலத்தில் 4 ஏர்களில் மாடுகளை பூட்டி உழவு செய்தனர்.
தமிழ்ப் புத்தாண்டான சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு தங்கக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மூலவர் சன்னதியிலுள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெரு மாள் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அலங்காரம் செய்யப்பட்டது.
சித்திரை வருடப் பிறப்பன்று மாடுகளை பூட்டி ஏர் உழுதால் விவசாயம் செழித்து செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விவசாயிகள் ஒன்று கூடினர். பிரம்பு குச்சி நுனிப்பகுதியில் ஆணியடித்து அதில் பூக்களை சுற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து தென்பரங்குன்றம் குடைவரை கோயிலில் விவசாயம் தொடர் பாக கூலி நிர்ணயத்துக்கு ஆலோசனை செய்தனர். பின்னர் தென்பரங்குன்றம் பகுதியிலுள்ள கோயில் நிலத்தில் பாரம்பரிய வழக்கப்படி நான்கு ஜோடி மாடுகளை 4 ஏர்களில் பூட்டி உழவு செய்து பணிகளை தொடங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT