Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM

ஞானதேசிகன் திடீர் டெல்லி பயணம்

கூட்டணி குறித்து பேசுவதற்காக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு டெல்லி மேலிடம் திடீர் அழைப்பு விடுத்துள்ளது.

திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திமுக உயர்மட்ட நிர்வாகிகளில் ஒருசிலர் காங்கிரஸை ஒதுக்கினாலும் இன்னும் சிலர் காங்கிரஸ் கூட்டணி இருந்தால்தான் வெற்றிபெறமுடியும் என்று வலியுறுத்துகிறார்களாம்.

திமுக தலைவர்கள் மீது 2 ஜி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பலம் வாய்ந்த கூட்டணியுடன் தேர்தலில் நிற்க வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

கூட்டணியில் காங்கிரஸை சேர்க்க ஸ்டாலின் விரும்பவில்லை என்றாலும் காங்கிரஸையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என திமுக தலைமை விரும்புகிறதாம்.

மேலும், கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் தேசிய கட்சிகளின் உறவுடன் மத்தியில் ஆட்சியிலிருந்துவிட்டு, இம்முறை தேசியக் கட்சிகளின் தொடர்பை துண்டித்துவிட்டால், டெல்லி அரசியலுக்கு திமுக-வுக்கு தளமில்லாமல் போகும் என்பது திமுக தலைமையின் கவலை.

இந்நிலையில்தான் குலாம் நபி ஆசாத் மூலம் திமுக-வுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது காங்கிரஸ். இதுதொடர்பாக முக்கியப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மேலிட அழைப்பின் பெயரில் வியாழக்கிழமை மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன். இன்று அவர் மேலிட நிர்வாகிகளுடன் பேசுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x