

மொடக்குறிச்சி தொகுதியில். முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு திமுகவில் சீட் கொடுத்ததை எதிர்த்து சொந்தக் கட்சியிலேயே சிலர் கிளர்ச்சி செய்தார்கள். அதையெல்லாம் சமாளித்து வெற்றிமுகத்தில் இருக்கிறாராம் அக்கா. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்தவர் என்பதால் சுப்புலட்சுமிக்கு முப்பதுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்ததாம். அத்துடன் எதிர் முகாமில் அதிமுக போட்டியிடாமல் பாஜக களத்தில் நிற்பதும் இவரது வெற்றியை மேலும் உறுதிப்படுத்துகிறதாம். சுப்புலட்சுமி வென்றால் மீண்டும் அமைச்சர் தானே என்று கேட்டால், “அதற்கான வாய்ப்பு கம்மி தான். அனுபவம் வாய்ந்த அக்காவை சபாநாயகர் இருக்கையில் அமரவைக்க திமுக மேல்மட்டத்தில் பேச்சு நடக்கிறது. அப்படி நடந்தால் தமிழகத்தின் முதல் நிரந்தர பெண் சபாநாயகர் என்ற அந்தஸ்து சுப்புலட்சுமி அக்காவுக்கும் அதற்கு வாய்ப்பளித்த பெருமை திமுகவுக்கும் கிடைக்கும்” என்கிறார்கள் சுப்புலட்சுமியின் ஆதரவாளர்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்