நிவாரண பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி: கே.வி. வங்கி அறிவிப்பு

நிவாரண பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி: கே.வி. வங்கி அறிவிப்பு
Updated on
1 min read

வெள்ள நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி வழங்கப்படும் என்று கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநர் வெங்கட்ராமன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுக்கு பக்கபலமாக..

சென்னையில் எதிர்பாராத அளவுக்கு பெய்த மழையால் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய பாதிப்புகளின்போது அரசுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு கரூர் வைஸ்யா வங்கி ரூ.2 கோடி வழங்கவுள்ளது. இந்த தொகையை விரைவிலேயே அரசு அதிகாரிகளிடம் அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in