Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

நாமக்கல்லில் திரைப்பட நடிகர் தற்கொலை

நாமக்கல்லைச் சேர்ந்த திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் கங்காநகரைச் சேர்ந்தவர் குமாரராஜன் (40). இவர் சந்திப்போம் சிந்திப்போம் என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார். நேற்று முன்தினம் குமாரராஜன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது குமாரராஜன் தூக்கில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த நாமக்கல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக குமாரராஜன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.குமாரராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x