Published : 26 Dec 2015 10:30 AM
Last Updated : 26 Dec 2015 10:30 AM

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, சென்னையில் உள்ள பிரபல தேவாலயங்களான சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி சர்ச், செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம், லஸ் பிரகாச மாதா தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், கதீட்ரல் தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு திருப்பலி மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன.

சென்னை சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணி சாமி இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி நிறை வேற்றினார்.

மிகவும் பழமை வாய்ந்த வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் குட்ஷெப்பர்டு ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம் ஆகியவற்றில் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். தேவாலயத்துக்கு வந்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. மேலும், வீடுகளில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கேக் கொடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் விழா மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x