Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM
காரைக்கால் அருகே கஜாபுயலின்போது கடற்கரையோரத் தில் தரைத்தட்டி நின்ற கப்பலை உடைத்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலின்போது, காரைக்கால் மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் கப்பல் துறைமுகத்தில் மணல் தூர் வாருவதற்காக, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வீரா பிரேம் என்ற கப்பல் (டிரஜர்) நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், புயல் காற்றின் வேகத்தால் தள்ளப்பட்டு வந்த கப்பல், வடக்கு வாஞ்சூர் பகுதியில் கடற்கரையில் தரைத்தட்டி நின்றது.
அந்தக் கப்பலின் உள்ளே எண்ணெய் மற்றும் எரிபொருட்கள் இருந்த நிலையில், அவை கடலில் கலக்காத வகையில் பாதுகாப்பாக மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி கள் பலனளிக்கவில்லை. மேலும், இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாகவும், கப்பலில் உள்ள எண்ணெயை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். பின்னர், கப்பலில் இருந்த எண்ணெய் பாதுகாப்பாக அகற்றப் பட்டது.
இந்நிலையில், அந்தக் கப்ப லின் பாகங்களை உடைத்து, முழுமையாக அகற்ற கப்பல் நிறுவனம்முடிவு செய்தது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக கப்பலின் பாகங்களை உடைத்தும் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகி றது. ஊழியர்கள், தொழிலாளர்கள் என 100 பேர் இப்பணியை மேற் கொண்டு வருகின்றனர். இன்னும் ஒரு வார காலத்தில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, கப்பல் முழுவதுமாக அகற்றப்படும் என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT