Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

ஒட்டுமொத்தமாக தேர்தல் ரத்து கோரி ஏப்.22-ல் உண்ணாவிரதம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

சென்னையில் செய்தியாளர்களிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று கூறியதாவது:

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம்,பரிசுகள், டோக்கன் அதிக அளவில்வழங்கப்பட்டுள்ளன. எனவே, 234தொகுதிகளிலும் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும். மே 2-ல்நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக் கோாி வரும்22-ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

ஜனநாயகம் தழைக்கவும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். சட்டவிரோதமாக நடந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர் போராட்டம் நடத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x