Last Updated : 11 Apr, 2021 03:16 AM

 

Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

கரோனா கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாத மக்கள்

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு தொற்று 100 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.நேற்று முன்தினம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக பட்சமாக 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவித்தது.

இப்பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், பொது மக்கள் கடந்த முறை போல இந்த முறை சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. முகக்கவசம் அணிவதிலும் போதிய கவனம் செலுத்துவதில்லை. காவல்துறையினரைக் கண்டால் முகக்கவசத்தை தேடி எடுத்து அணிவது, பெண்கள் சேலை தலைப்பால் முகத்தை மூடுவது, சிலர் தோளில் உள்ள துண்டால் முகத்தை மூடிக்கொண்டு, எகத்தாளமாய் சிரிப்பது என கரோனாவின் இரண்டாம் அலை வீரியத்தை உணராமல் விருப்பப்படி உலா வருகின்றனர்.

சுயக்கட்டுப்பாடு இருந்தால்தான் நாம் இந்த இரண்டாவது அலையை எதிர்கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x