Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM
சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே கீழடி அகழாய்வில் கருப்பு, சிவப்பு நிறம் கொண்ட மண் கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பிப்.13-ம் முதல் நடந்து வருகிறது.
கீழடியில் 9 குழி களுக்கு அளவீடு செய்து குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதில் முதல் குழியில் பாசிமணிகள், பானை ஓடுகள், பனைகள், தட்டுகள், மண்ணாலான கூம்பு வடிவப் பாத்திரம், மண் மூடிகள் கிடைத்தன. முதல் குழியில் மண் தட்டும், 2-வது குழியில் கருப்பு, சிவப்பு நிறத்தால் ஆன மண் கிண்ணமும் நேற்று கிடைத்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT