Published : 13 Dec 2015 11:17 AM
Last Updated : 13 Dec 2015 11:17 AM

கோவையில் சாமியார் கொலை

கோவை சிங்காநல்லூரில் குறி சொல்லி வந்த சாமியாரை கொலை செய்து, சுமார் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட தாக போலீஸார் தெரிவித் தனர்.

கோவை சிங்காநல் லூரில் பேருந்து நிலையத் தின் பின்புறம் உள்ள குடியிருப்புப் பகுதி தனபால் லேஅவுட். இப்பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (எ) மணி(45). பிரம்மச்சாரியான இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டில் ஒரு பகுதியில் மாரியம்மன் கோயில் கட்டி அங்கு இவரே சாமியாராகவும் இருந்தார். அங்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லும் தொழிலையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுப்பிரமணி படுக்கையறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது நேற்று காலை தெரியவந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x