Last Updated : 10 Apr, 2021 02:45 PM

 

Published : 10 Apr 2021 02:45 PM
Last Updated : 10 Apr 2021 02:45 PM

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு: புதிதாக 272 பேருக்கு பாதிப்பு

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 700-ஐ நெருங்கியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஏப். 10) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,821 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 187, காரைக்கால் - 61, ஏனாம் - 9, மாஹே- 15 என மொத்தம் 272 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த 87 வயது முதியவர், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியிலும், காரைக்கால் பிரபு நகரைச் சேர்ந்த 76 வயது முதியவர், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இறப்பு மொத்த எண்ணிக்கை 700-ஐ நெருங்கியுள்ளது. இறப்பு விகிதம் 1.58% ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 43 ஆயிரத்து 737 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 529 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,689 பேரும் என 2,218 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 136 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 830 (93.35 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 6 லட்சத்து 96 ஆயிரத்து 561 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 735 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் 28 ஆயிரத்து 680 பேர் (64 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 16 ஆயிரத்து 474 பேர் (52 நாட்கள்), பொதுமக்கள் 44 ஆயிரத்து 344 பேர் (36 நாட்கள்) என மொத்தம் 89 ஆயிரத்து 498 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x