Published : 10 Apr 2021 01:37 PM
Last Updated : 10 Apr 2021 01:37 PM

அனைத்துக் காவலர்களுக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் தகவல்

மகேஷ்குமார் அகர்வால் | படம்: எல்.சீனிவாசன்.

அனைத்துக் காவலர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீண்டும் கரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, “இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. சென்ற வருடம் கரோனா பரவலைத் தடுப்பதற்கு அனைத்து நிபுணர்களும், மூன்று விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள். முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது.

இந்த வருடம் நம்மிடையே கரோனா தடுப்பூசி உள்ளது. கோவாக்சின், கோவிஷில்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன. காவலர் குடியிருப்புகளில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். இதுவரை 6,000 காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை 100 சதவீதமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x