Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM
கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இன்று முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘கடந்த ஆண்டு ஜுலை 6-ம் தேதிமுதல் முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க முடியும்என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 10-ம் தேதி(இன்று) முதல் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT