Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM

முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல்

கரோனா தொற்று அதிகரித்துள்ளதால், இன்று முதல் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘கடந்த ஆண்டு ஜுலை 6-ம் தேதிமுதல் முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க முடியும்என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 10-ம் தேதி(இன்று) முதல் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x