Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கோவை அரசு மருத்துவமனையில் 3-வது நாளாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: கரோனா வார்டில் உணவு, தங்குமிடம் வசதி இல்லை என குற்றச்சாட்டு

கோவை அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை வார்டுகளில் பணியாற்றுவோருக்கு சரியான உணவு, தங்குமிடம் வசதி செய்து தரப்படாததை கண்டித்து முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவ மனையில் முதுநிலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சுமார் 200 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இம்மா ணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு முறையான உணவு, பணி முடிந்ததும் தனிமைப்படுத் துவதற்கு அறை உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர் பாக மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் கடிதம் அளித்துள்ளனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மருத்துவ மனை வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையம் முன்பு 3-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக மாணவர்கள் கூறியதாவது: கரோனா பணியில் ஈடுபட்டுவிட்டு தனிமைப்படுத்திக் கொள்ள பொதுவான அறை ஒதுக்கிஇருக்கின்றனர். அங்கு, சரியான கழிப்பறை, தண்ணீர் வசதி இல்லை. கரோனா பணியில் ஈடுபடுவோருக்கு உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நாங்களே உணவுஎடுத்து வந்து சாப்பிட வேண்டும் என்கின்றனர். 2020-21-ம் கல்வியாண் டுக்கான பயிற்சி மருத்துவ மாணவர்கள் தங்கள் பயிற்சியை நிறைவுசெய்துவிட்டனர்.

நடப்பு கல்வியாண்டுக்கான பயிற்சி மருத்துவ மாணவர்கள் இன்னும் வரவில்லை. கரோனா வார்டு பணியில் முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்களில் ஒருபகுதியினர் ஈடுபடுத்தப் படுவதால் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், முதுநிலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நோயாளிகளை முழுமையாக கவனிக்க முடியாத நிலை உள்ளது.

ரத்த மாதிரிகளை சேகரிப்பது, மருந்து மாத்திரைகளை அளிப்பது, அறிக்கை தயார் செய்வது போன்றபணிகளையும் முதுநிலை மருத்துவமாணவர்கள் செய்ய வேண்டியுள்ளது. எனவே, போதுமான செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்புக்காக அனுமதிக்கப்படுவோருக்கு வழங்குவதற்கு போதிய அளவு மருந்துகள்இல்லை. இதனால் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்படுகிறார் கள். அதை கேட்டால் அரசு நிதிஒதுக்கா ததால் மருந்துகள் வரவில்லை என்கிறார்கள்.மாதந்தோறும் வழங்கப்படும் தொகுப்பூ தியம் கடந்த 2 மாதங்களாக வழங்கப்பட வில்லை. அன்றாட செலவையும் கவனித்துக்கொண்டு, குடும்பத் துக்கும் உதவ வேண்டியுள்ளது. எனவே, உரிய நேரத்தில் தொகுப் பூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக டீன் நிர்மலாவிடம் கேட்டதற்கு, “மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன. இல்லாத மருந்துகளை வாங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இறுதியாண்டு எம்.பி. பி.எஸ் மாணவர்களுக்கு இன்னும் தேர்வுகள் தொடங்கவில்லை. புதிய பயிற்சி மருத்துவ மாணவர்கள் வர இரண்டரை மாதங்கள் ஆகும். கரோனா சிகிச்சை வார்டில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களுக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசு என்ன சொல்கிறதோ அதற்கேற்ப நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x