Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக கூட்டணிக்கு பொதுமக்கள் மீண்டும் வாக்களித்துள்ளனர். கரோனா பரவல் அச்சத்துக்கு இடையே நடைபெற்ற தேர்தல் என்பதால், வாக்காளர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் ஆணையம் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்கவும் உரிய வசதிகள் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டிருந்தது வரவேற்புக்குரியது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT